பலவந்தமாக காணாமல் போவோருக்கு பாதுகாப்பு வழங்க போராட்டம்

2553 0

பலவந்தமாக காணாமல்போதல்களிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிப்பது தொடர்பான சர்வதேச சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலத்துக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாளைய தினம் சமர்ப்பிக்கப்படவிருந்த குறித்த சட்டமூலமானது அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை மீளப் பெறுவதை விடுத்து, நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்திலிருந்து அதனை நீக்க வேண்டும் என இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜித் பிரசன்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணாமல்போனோர் தொடர்பான பணியக சட்டத்தில்  திருத்தம் செய்து, அதனை மீளப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Leave a comment