மூதூர் இரட்டை கொலை – விளக்கமறியல் நீடிப்பு

32125 0

ஏறாவூர் இரட்டைப் படுகொலை வழக்கின் சந்தேகத்துக்குரிய 5 பேரினது விளக்கமறியல் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் வசித்துவந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பிணையில் செல்ல அனுதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.