மின் பயணாளர்களுக்கு சிரமம் ஏற்பட இடமளிக்கப்படாது!

241 0

தற்போது நாட்டில் மின் சேவை வழமைபோல் இடம்பெற்று வருவதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

எந்தவொரு காரணத்திற்காகவும் மின் பயணாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக இடமளிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதும், நுரைச்சோலை, கெரவலபிடிய உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்கள் வழமைபோல் இயங்கி வருவதாகவும், அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் சிறு சிறு மின் துண்டிப்புகள் ஏற்பட்ட போதும், அதனை சீர் செய்யத் தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத சிற்சில ஊழியர்கள் தற்போது பணிக்கு திரும்பி வருவதாகவும், மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment