வாகனங்கள் திடீர் சோதனை 9 வாகனங்கள் சேவையில் ஈடுபட தடை

226 0

ஹட்டன் பகுதியில் சேவையில் ஈடுபடும் பாடசாலை சேவை வாகனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரும் நுவரெலியா மாவட்ட வாகன பரிசோதகர் ஆர்.சேனாரத்தன ஆகியோர் இணைந்தே இன்று (18) குறித்த திடீர் சோனையில் ஈடுபட்டனர்.

பாடசாலை சேவை மற்றும் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வேன், பஸ் வண்டிகள் 50 வரை  சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் பல்வேறு குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபட்டு வந்த 9 வாகனங்களுக்கு சேவையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.

மேலும், சில வாகனங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் முன்னிலையில் காட்டிய பின் மீண்டும் சேவையில் ஈடுபடமுடியும்.

அவ்வாறு காட்டப்படாத வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் போக்குரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment