குப்பைக் கொட்டிய 99 பேர் கைது

253 0

மேல் மாகாணத்தில் முறையற்றவகையில் குப்கைளை வீசிச்சென்ற 99 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் இராணுத்தினர் இணைந்து கடந்த 12ஆம் 13ஆம் திகதிகளில் மேற்கொண்ட சிறப்பு சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 59 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நுகேகொடை, கல்கிஸ்ஸை, கம்பஹா, களணி, மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment