காவல்துறை காண்ஸ்டபிள் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

472 0

பண்டாரவளை – பொரலந்தை காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் காவல்துறை காண்ஸ்டபிள் ஒருவர் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர், தமது உயிரை மாய்த்துக்கொண்டைமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment