லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு யாசகம் கேட்கும் பணியில்  பௌத்த பிக்குகள்

447 0

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்துவதற்கான நிதி சேகரிப்புக்காக யாசகம் கேட்கும் பணியில்  பௌத்த பிக்குகள் இன்று ஈடுபட்டனர்.

கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் அவர்கள் யாசகம் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பிக்குகள் ஆடைக்காக சிறைக்குச் சென்றவர்களை பாதுகாக்கும் நிதியத்துக்கு நிதி சேகரிக்க பிக்குகளால் இந்த யாசகம் கேட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அதில் கலந்துகொண்டனர்.

 

 

Leave a comment