இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு

223 0

கடுவலை – கொதலாவல – பட்டியவத்தை பிரதேசத்தில் கழிவறையில் குழியொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த பெண் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயிருந்ததாக வீட்டவர்கள், நவகமுவ காவல்துறைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் 45 வயதான குறித்த பெண்ணின் சடலம், வீட்டின் கழிவறை குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Leave a comment