சட்டவிரோதமான மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

248 0

அம்பாறை – உஙன – பணராதுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மரக் குற்றிகளுடன் பாரவூர்தியில் பயணித்து கொண்டிருந்த ஒருவரை காவற்துறை கைது செய்துள்ளது.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் உஙன – கொனாகொல்ல பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதுடன் அவர் இன்று அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment