அம்புலுவாவையில் மண் சரிவு – 5 குடும்பங்கள் இடம்பெயர்வு

1052 0

கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவனல்லை அம்புலுவாவ பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லை அம்புலுவாவ பிரதேசத்தில் கீழ் அம்பலாவ பகுதியின் 100 ஏக்கர் கிராமத்தில் ஏற்பட்ட குறித்த மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசித்த 5 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மண்சரிவு காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவனல்லை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment