சுதந்திர கட்சி உறுப்பினராக செயற்படுவேன் – அருந்திக

342 0

பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகவும் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்படவுள்ளதாகவும் சுற்றுலா மற்றும் கிரிஸ்தவ விவகார முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் ஆரம்பம் முதலே இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு பிரச்சினை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என எவராவது நினைப்பார்களாயின் அது தவறாகும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment