இலங்கையர் ஒருவருக்கு 4 வருடகால சிறை தண்டனை!

17973 0
எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் இலங்கையர்களை கனடாவிற்கு அழைத்துச் சென்றமைக்காக, இலங்கையர் ஒருவருக்கு 4 வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு குறித்த கப்பலின் மூலம் 492 இலங்கை அகதிகள் கனடாவின் வன்குவார் பகுதியைச் சென்றடைந்தனர்.
அவர்களை ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கி கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சட்டத்தை மீறியாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையரான குணாரொபின்சன் கிறிஸ்துராஜாவிற்கு, பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றம் நேற்று நான்கு ஆண்டுகால சிறை தண்டனையை விதித்தது.
எனினும் இந்த வழக்கிற்காக அவர் ஏற்கனவே 7 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஏற்கனவே அனுபவிக்கப்பட்டதாக கருதி, நீதிமன்றத்தினால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்த்துராஜாவும் எம்.சீ.சன்சீ கப்பல் மூலமே கனடாவை சென்றடைந்த போதும், அவரே இறுதி தருணத்தில் கப்பலை செலுத்திச் சென்ற நிலையிலேயே அவர் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment