இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

313 0

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் 2 இழுவைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டதன் பின்னர் இன்று காலை மேற்படி 12 மீனவர்களும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 12 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment