சிறிலங்கா கிரிக்கட் நிர்வாகத்துக்குள் முன்னாள் வீரர்கள் பலருக்கு பதவிகள்?

430 0

சிறிலங்கா கிரிக்கட் நிர்வாகத்துக்குள் முன்னாள் வீரர்கள் பலருக்கு பதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

இதன்படி அரவிந்த டி சில்வா, மஹெல ஜெயவர்தன, ப்ரெண்டன் குருப்பு, ரொசான் மஹாநாம உள்ளிட்ட பலருக்கு புதிய பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கட் அணியின் விளையாட்டுத் திறன் வெளிப்படுத்தலில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு சிறிலங்கா கிரிக்கட் நிர்வாகத்தின் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment