முல்லைத்தீவில் இளைஞர் யுவதிகளுக்கு கடற்படையினர் பயிற்சி

391 0

625.0.560.320.160.600.053.800.668.160.90-22முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்று கடற்படையினரின் முகாம் வளாகக் கடலில் காவல்துறையினரால் இளைஞர் யுவதிகளுக்கு விசேட கடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைத்து குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கடலில் பயணம் செய்யும்போது இயற்கை அனர்த்தத்தினாலோ அல்லது நீரில் மூழ்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலோ எவ்வாறு இலகுவாக கரையை வந்தடைவது என்பது தொடர்பான பயிற்சியே வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சியானது இன்று காலை 10.00 மணியிலிருந்து மாலை 4.00மணிவரை நடைபெற்றது.

பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்றவர்களுக்கு பொலிஸ்மா அதிபரின் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டது.