5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை!

252 0

நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து   மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை தொடர்ந்தும்   நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இரத்­தி­ன­புரி, களுத்­துறை, காலி, கேகாலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பாதிப்பேற்­படும் பகு­தி­யி­லி­ருந்து மக்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறும் அத்­தி­ணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இது தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் விடுத்­துள்ள விசேட அறிக்­கையில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த ஒரு ­வா­ர­கா­ல­மாக நாட்டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண கால­நிலை மாற்­றத்தால் தொடர்ந்தும் பலத்த மழை பதி­வாகி  வரு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் கடந்த 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் 100 மில்லி மீற்ற­ருக்கும் மேல் மழை­வீழ்ச்சி நாட­ளா­விய ரீதியில் பதி­வா­கி­யுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக நாட­ளா­விய ரீதியில் ஐந்து மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு ஏற்­ப­டு­வ­தற்­கான அபா­ய­முள்­ளது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அம்­ப­க­முவ பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்கள், குறிப்­பாக கினி­கத்­தேனை பிர­தேசம், களுத்­துறை மாவட்­டத்தின் அக­ல­வத்தை, புளத்­சிங்­கள, பாலிந்­த­நு­வர, இங்­கி­ரிய, மத்­து­கம ஆகிய பிர­தேச சபை­க­ளுக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளுக்கும், கேகாலை மாவட்­டத்தின் யட்­டி­யாந்­தோட்டை, புளத்­கொஹாப்­பிட்டிய பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்மித்த பகு­தி­க­ளுக்கும் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­ப­டு­வ­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் கிரி­வுல்ல பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்மித்த பகு­திகள், கல­வானை மற்றும் நிவித்­தி­கலை, காலி மாவட்­டத்தின் நாகொடை பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­மித்த பகுதிகளிலேயே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாயம் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­வ­தாக தேசிய கட்­டிட ஆய்­வுகள் நிறு­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.  இதனால் மண்­ச­ரிவு ஏற்­படும் அபாய வல­ய­மாக அறி­விக்­கப்­பட்ட பகு­தி­களில் தற்­போது நிலவும் மழையுடன் கூடியகால­நிலை தொடர்ந்தால் நிலச்­ச­ரிவு, பாறைகள் இடிந்து விழுதல், நிலத்­தாழ்வு உள்­ளிட்ட அனர்த்­தங்கள் ஏற்­படும் வாய்ப்­புள்­ளது.

எனவே அங்கு மலைப்­பாங்­கான பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­க­ளின்­போது மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் மரங்கள் அல்­லது கம்­பங்கள்  முறிந்­து­விழும் அபாயம்,நிலம்,சுவர், அல்­லது கட்­ட­டங்­களில் ஏதேனும் வெடிப்­புக்கள் ஏற்­ப­டுதல், நிலத்­தி­லி­ருந்து திடீ­ரென நீருற்­றுக்கள் உள்ளிட்ட மண்சரிவு அபாய அறிகுறிகள் காணப்படுமாயின் மக்கள்

உடனடியாக அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு  இடம்பெயருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேகமூட்டத்துட னான காலநிலை தொடரும் சந்தர்ப்பங்களின் போது குறித்த பிரதேசங்களுக்கு பய ணிக்கும் வாகன சாரதிகளும் முன்னெச்சரிக்கையாக   இருக்ககுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a comment