ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களை கோரவேண்டும் – ரவி கரு­ணா­நா­யக்க

226 0

ஊடக நிறு­வ­னங்­களில் பிர­தா­னிகள், பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் ஆகியோரது சொத்து விப­ரங்­களை கோர வேண்டும் என முன்னாள் நிதி அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

நாங்கள் பணம் திரட்­டு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு வர­வில்லை. மக்­க­ளுக்கு சேவை செய்­யவே வந்­துள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்­பான சொத்து விப­ரங்கள் தொடர்பில் ஒழுங்கு பிரச்­ச­ினை­யொன்றை எழுப்­பிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சொத்­து­வி­ப­ரங்கள் தொடர்­பான விட­யங்கள் தொடர்பில் உண்­மைக்கு புறம்­பான செய்­திகள் ஊட­கங்­க­ள் வெளி­யிட்டு வரு­கின்­றன. ஆகவே இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அமைச்­சர்கள் , பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சொத்­து­வி­ப­ரங்­களை சமர்­ப்பிப்­பது போன்று ஊடக பிர­தா­னி­களும் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் சொத்­து­வி­ப­ரங்­களை சமர்ப்­பிக்க வேண்டும். இதற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்றார்.

இதன்­போது சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய கூறு­கையில், இது எனக்கு பொறுப்­பான காரி­ய­மல்ல. ஊட­க­வி­ய­லா­ளர்கள் குறித்­தான சொத்து விப­ரங்­களை எடுப்­ப­தற்கு எனக்கு அதி­காரம் கிடை­யாது என்றார். இதன்­போது  மக்கள் விடு­தலை முன்­னணி தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க கூறு­கையில், அனைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் தப்­பாக எண்ண வேண்டாம். நீங்கள் கூறு­வது தவ­றாகும். ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் சொத்து விப­ரங்­களை கோர­மு­டி­யாது. அதற்­கான அதி­காரம் சபா­நா­ய­க­ருக்கு கிடை­யாது. எனினும் பத்­தி­ரிகை ஆசி­ரியர் சொத்து விபரங்களை பத்திரிகை பேரவைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து சபாநாயகர் கரு ஜெயசூரிய பதிலளிக்கையில், இது தொடர்பாக ஊடகத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றேன் என்றார்.

Leave a comment