தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மக்களை கைவிட்டு செயற்படுகின்றனர்- சுரேஷ்

380 0

suresh-premachandranபயங்கரவாத தடை சட்டத்தை தொடர்ந்தும் பேணும் எண்ணத்திலேயே அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் விடயத்திலும் மேலும் பல தமிழர் பிரச்சினைகளிலும் அரசாங்கம் போலியான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது.  தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மக்களை கைவிட்டு செயற்படுகின்றனர்.

தமிழ் தலைமை குறித்தும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். முன்னாள் அரசாங்கம் தமக்கு எதிரானவர்களை கைது செய்ய பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தியது.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, அதே சட்டத்தை வேறு பெயரில் பேணுவதற்கு முயற்சிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.