பிரான்ஸ் கடற்படைக் கப்பல் திருகோணமலையில்

375 0

82-Dupuy-le-Lome-600-1பிரான்ஸ் நாட்டின் கடற்படைக் கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல் இலங்கை வந்துள்ளதாக, கடற்படை தமது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ரேவி என்ற குறித்த கப்பல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் அங்கு நங்கூரமிட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் கப்பலின் அதிகாரிகள், கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.