மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

436 0

மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளையும், படுகொலைகளையும் நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

நவ சமசமாஜக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகம் முன்பாக இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, மனித உரிமை செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவினால் மியன்மார் தூதரக பிரமுகரிடம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளை நிறுத்துமாறு கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Leave a comment