கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரி மாணவர்கள் பாடசாலையின் பிரதான நுழை வாயிலை அடைத்து கண்டன ஆர்பாட்டம் (காணொளி)

8177 0

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியில் கடந்த வருடம் ஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு, கல்லூரி அதிபர் ஒத்துழைப்பு வழங்கினார் என்ற காரணத்தில் அப்பகுதி மக்களால் கடந்த காலங்களில் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன

குறித்த சம்பவம் தொடர்பில் காரணமாக கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டங்கள் காரணமாக சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரும், அதிபரும் வலய கல்வி பணிப்பாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

இதனை தொடர்ந்து கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரிக்கு புதிய அதிபராக எஸ்.சாந்தகுமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அதிபர் சபேஷன் மீண்டும் கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில் அதனை கண்டித்து பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், கிராம அபிவிருத்தி சங்கு உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின்  உறுப்பினர்கள் இணைந்து கல்லூரியின் பிரதான நுழை வாயிலை அடைத்து  கண்டன ஆர்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள் தற்போது பாடசாலை கல்வி நிர்வாகம் சீராக செயல்படுகின்ற நிலையில் குறித்த சர்ச்சைக்குரிய அதிபர் மீண்டும் கல்லூரிக்கு வருவதனால் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள், மாணவர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதை  பெற்றோர்களாகிய தாங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்க போதில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Leave a comment