ஐக்கிய தேசியக் கட்சி 2020ம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் என்று கூறினாலும், தனக்கு அவ்வாறானதொரு எதிர்பார்ப்பு இல்லை என, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
தான் உள்ளிட்ட கட்சியினர் எதிர்பார்ப்பது சுதந்திரக் கட்சியை முதன்மைப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதையே எனவும் அவர் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் மஹிந்த அமரவீர, இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

