காஷ்மீர் விடயம் – இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாகிஸ்தான்

343 0

Kashmir_freeகாஷ்மீர் விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை அழைத்துள்ளது.

பாகிஸ்தானின் வெளிவிவகார பேச்சாளர் நபீஸ் சகாரியா இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அழைப்புக் கடிதம் ஒன்று, பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீர் விடயத்தை பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக தீர்க்க வேண்டும்.

இதன்அடிப்படையில் பாகிஸ்தானின் வெளிவிவகார செயலாளரால், இந்திய வெளிவிவகார செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.