அர்ஜூன் அலோசியஸிற்கு கிடைக்கப் பெற்ற சர்ச்சைக்குரிய தகவல்கள்

293 0

பிணை முறி பரிமாற்றம் தொடர்பிலான சர்ச்சைக்குரிய தகவல்கள் அர்ஜூன் அலோசியஸிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

முன்னதாக பதிவு செய்யப்பட்ட, அர்ஜூன் அலோஸியஸ் மற்றும் பர்பேசுவல் ட்ரேஸரிங் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் மூலம், இந்தத் தகவலை, பிணை முறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மத்திய வங்கியின் பிணை முறி ஏலம் குறித்த உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸ் வசம் இருந்ததாக இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து விசாரிக்க ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வளாகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிணை முறி மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட, விசாரணைகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பல, தற்போது அங்கு வைக்கப்பட்டிருக்கின்றமையே இதற்குக் காரணமாகும்.

Leave a comment