சரத் பொன்சேகாவின் கருத்து கட்சியின் கருத்தல்ல – ஐ.தே.க

282 0

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாமுன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய தொடர்பில் கடந்த தினம் வெளியிட்ட கருத்து கட்சிய தேசிய கட்சியின் உத்தியோக நிலைப்பாடு அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 அமைச்சர் சரத் பொன்சேகாவின் கருத்து கட்சியின் உத்தியோக பூர்வ நிலைப்பாடு கருத்தோ அல்ல.

 இலங்கையில் யுத்தத்தின் பொருட்டு அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ள ஒரு போதும் அரசாங்கம் இடம்தராது என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

 அதுவே கட்சியின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment