கருணாவின் வழக்கு விசாரணை – திகதி குறிப்பு

252 0

 முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பான வழக்கு விசாரணை சட்டமா அதிபர் ஆலோசனையின் பொருட்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 இந்த நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த அறிவிப்பை விடுத்தது.

 பிரதி அமைச்சராக கடமையாற்றிய போது பாதுகாப்பின் பொருட்டு வழங்கப்பட்ட 10 கோடி ரூபா பெறுமதியான அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment