முஸ்லிம்கள் எவரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லை

344 0

kuraவடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எவரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லையென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் இன்னமும் அவர்களின் சொந்தக் காணிகளில் குடியேறமுடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், அவர்களைக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரவூப் கக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த இருவரின் வேண்டுகோளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க முன்வந்தேன்.

ஆனால், வெளியேறிய மக்களின் காணிகளை சிலர் பிடித்துக்கொண்டு அதற்கு போலியான உறுதிகளை வைத்துள்ளதாக செய்திகள் வந்தாலும், அவ்வாறான கருத்துக்களை எம்மிடம் யாரும் முன்வைக்கவில்லை. உரிய ஆவணங்களுடன் எம்மை சந்தித்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அவ்வாறு இதுவரை யாரும் வரவில்லை என்றார்.