இலங்கையர்கள் 33 பேர் பயணித்த படகு ஒன்றை இந்தோனிசிய கடற்படையினர் கடந்த வாரம் கண்காணித்துள்ளதாக அவுஸ்திரேலியா தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த படகு அவுஸ்திரேலியாவுக்கு அல்லது நியூஸிலாந்துக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமது கடற்படையினருக்கு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.