முன்னார் இராணுவத் தளபதிகள் விடயத்தில் வெளிநாடுகளின் தலையீட்டுக்கு அனுமதி இல்லை – மைத்திரி 

2487 0
முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் இராணுத்தினர் விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு அனுமதி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழா நேற்று பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது.
அந்த விழாவிற்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அண்மையில் ஜகத் ஜெயசூரிய தொடர்பான பிரச்சினைகள் தோற்று விக்கப்பட்டுள்ளன.
ஜகத் ஜெயசூரியவின் விடயத்தில் மாத்திரமல்ல நாட்டில் உள்ள எந்த ஒரு இராணுவத்தினர் விடயத்திலும் வெளிநாட்டவர்கள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a comment