குடிநீரில் மசகு எண்ணெய் : மக்கள் ஆர்ப்பாட்டம்

165 0

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் எண்ணை கசிவினால் குடிநீர் மாசடைகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து குயில்வத்தை பகுதியில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது

வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலே இன்று (03) முற்பகல் 11 மணியளவில் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கீழ் பகுதியில் வசிக்கும் 25 குடும்பங்கள் வரை சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கசியும் கனிய எண்ணை குடிநீர் நிலைகளில் கலப்பதனால் பாதிப்டைந்துள்ளதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்

தாம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து அது தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டதுடன் ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

Leave a comment