விசேட போக்குவரத்து சேவைகள் நடைமுறை- காவல்துறை தலைமையகம்

11541 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவாண்டு விழா இன்று கெம்பள் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பேஸ்லைன் வீதியில் விசேட போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் காலை பதினொரு மணி முதல் பேஸ்லைன் வீதியூடாக இங்ந்ரம் சந்தியில் இருந்து பொரளை சந்திவை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

பேலியகொட பகுதியில் இருந்து பொரளை நோக்கி செல்லும் வாகனங்கள், ஸ்ரீ சத்தர்ம மாவத்த வீதி, மாலிகாவத்த ஊடான பஞ்சிகாவத்தை வீதி, மருதானை வீதிகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  பொரளையில் இருந்து பேலியகொட நோக்கி பயணிக்கும் வாகனங்கள், மருதானை வீதி, மருதானை பாலம் சந்தி, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, மாலிகாவத்த அல்லது கொட்டாஞ்சேனை ஊடாக பேலிகொட நோக்கி பயணிக்க முடியும் என காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment