மகிந்த அணி நிபந்தனை 

284 0

தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான யோசனை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சம்மேளனத்தில் கலந்து கொள்வதாக மகிந்த ஆதரவு அணி தெரிவித்துள்ளது.

மகிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

சம்மேளனத்தில் கலந்து கொள்ளுமாறு தங்களுக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்சி சம்மேளத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை அங்கத்துவப்படுத்தும் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment