இலங்கையில் வறட்சி – யால சரணாலயம் மூடப்படுகிறது.

330 0

இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை யால தேசிய வனவிலங்கு சரணாலயம் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

யால வனவிலங்கு சரணாலய பொறுப்பாளர் டீ.பீ.சிஹாசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக யால சரணாலயத்தின் விலங்கினங்களுக்கு நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சரணாலயத்தின் உட்கட்டமைப்பையும் செயற்பாடுகளையும் பராமரிக்க முடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக யால வனவிலங்கு சரணாலய பொறுப்பாளர் டீ.பீ.சிஹாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

Leave a comment