தற்போதைய அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை நகைப்புக்குரியதாக மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றே நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.
எனினும் அதற்கு சில தாமதங்களும் தடங்களும் ஏற்பட்;டன.
இன்று நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது தற்போது அர்த்தமற்ற ஒன்றாக மாறியுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஒளடதங்களின் விலைக்கு குறைத்துள்ள போதும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வரப்பட்டுள்ளது.
இது நகைப்புக்குரிய விடயமாகும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.