அமெரிக்காவில் நிதி மோசடி – லெபனான் பிரஜையை நாடு கடத்துமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு

224 0

அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரை லெபானுக்கு நாடு கடத்துமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இலங்கையில் தங்கியுள்ள குறித்த லெபனான் நாட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அஹமட் பக்ரி யுhஅநன குயமாசi என்ற லெபான் நாட்டவரை தமது நாட்டிற்கு நாடு கடத்துமாறு அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரதிவாதியான லெபனான் நாட்டவர் நாடு கடத்தக்கூடிய அளவில் குற்றமிழைத்திருப்பதாக கருதி அவரை நாடு கடத்துமாறு உத்தரவிட்டார்.

Leave a comment