தபால் நிலையத்தில் தீ – பொறுப்பதிகாரி பலி

299 0

ஏல்பிட்டிய, குருந்துகஹஹெக்ம பிரதேசத்திலுள்ள உப தபால் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் தபால் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 6.30 மணியளவில் குருந்துகஹஹெக்ம உப தபால் நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தீ விபத்தின் போது அங்கு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய 49 வயதுடைய பெண் அதிகாரி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment