சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் – இந்திய வம்சாவளி தொழிலதிபர் போட்டி 

338 0

சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் இந்த தேர்தலில் போட்டியிடலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணி அறிவித்துள்ளார்.

இதுபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a comment