இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கத்தியுடன் ஒருவர் கைது

282 0

இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கத்தியுடன் ஒருவரை கைது செய்த லண்டன் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை ஆகும். லண்டனில் உள்ள இந்த அரண்மனையின் அருகே தடை செய்யப்பட்ட இடத்தில் ஒரு கார் நேற்றுமுன்தினம் இரவு நின்றுகொண்டிருந்தது. அந்த காருக்குள் மிகப்பெரிய கூர்மையான கத்தி இருப்பதை 2 போலீஸ் அதிகாரிகள் கண்டனர்.

காரில் இருந்த நபரை அவர்கள் வெளியே இழுத்து, கைது செய்ய முயன்றபோது 2 போலீஸ் அதிகாரிகளும் காயம் அடைந்தனர்.

கடைசியில் 26 வயதான அந்த நபர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மத்திய லண்டன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.காயம் அடைந்த போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்துகின்றனர். சம்பவம் நடந்தபோது அரண்மனையில் ராணி குடும்பத்தினர் யாரும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன.இந்த சம்பவம் பற்றி போலீஸ் உயர் அதிகாரி கய் காலிங்க்ஸ் கூறும்போது, “போலீஸ் அதிகாரிகளின் விரைவான துணிவான நடவடிக்கையால் அந்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபருடன் பொதுமக்களில் யாரும் தொடர்பு கொள்ள வில்லை” என்று குறிப்பிட்டார்.

Leave a comment