கதிர்காமம் ஆலயத்தில் பஸ்நாயக நிலமே மற்றும் பூஜகர் ஆகியோருக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு காரணம் நிதி பிரச்சினையே என தெரியவந்துள்ளது.அவர்களுக்கு இடையில் கடந்த 22ஆம் திகதி ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிகாலை பூஜை இடம்பெறவில்லை.
ஆலயத்தை திறக்க விடாது தம்மிடம் இருந்த திறப்பை பலவந்தமான பஸ்நாயர நிலமே பெற்று கொண்டார் என ஆலயத்தின் பூஜகர் தெரிவித்தார்.
இருப்பினும் பூஜகர் தெரிவித்த கருத்துக்களை, பஸ்நாயக நிலமே மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

