ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள வோல்னா என்ற ஊரில் கடற்கரை பகுதியில் கட்டுமாண பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் கடலுக்குள் வீழ்ந்து விபத்துள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 18 பேர் பலியாகி உள்ளதாகவும் 8 காயமடைந்துள்ள நிலையில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரஷ்ய அனர்த்த முகாமைத்துவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
விபத்தில் காணாமல் போயுள்ள பஸ்ஸின் சாரதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் விபத்திற்கான காரணம் தொடர்பில் தகவல்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.