சீனாவில் புயல் – 12 பேர் பலி

244 0

தென் சீனாவை ஊடறுத்து சென்ற புயல் சின்னம் காரணமாக 12 பேர் பலியாகினர்.

சீனாவின் ஹூஹாய் நகரிலுள்ள குவாங்டாங் மாகாணத்தை ஊடறுத்து சென்ற குறித்த புயல் சின்னம் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த புயல் சின்னம் காரணமாக 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சவ்த் ச்சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a comment