கனடாவில் தமிழ்ப் பெண்ணிடம் சங்கிலி அறுக்க முனைந்த திருடன் மாட்டினார்!

374 0

கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் 22  ஆம்இ திகதி இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ஸ்காபரோ நகர் பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த தமிழ் பெண் வந்திருந்த போது, வீதியால் சென்ற கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முயன்றுள்ளார். எனினும் தமிழ் பெண் தனது சங்கிலியை கையால் இறுகப் பற்றிய நிலையில் அப்பெண்ணை வீதியில் தள்ளி விழுத்தி விட்டு திருடன் தப்பி சென்றுள்ளார். பெண் கீழே விழுந்ததை அவதானித்த அந்த வீதியால் சென்ற ஏனைய தமிழ் உறவுகள் தப்பி ஓடிய திருடனை துரத்திச் சென்றனர்.

அவர்களிடம் திருடன் அகப்பட்ட போது திருடனுடன் ஏனைய மூன்று கறுப்பினத்தவா்களும் ஒன்று சோ்ந்து தமிழ் இளைஞா்களிடம் தகராறில் ஈடுபட்டனா். இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாக திருடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a comment