முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் கைக்குண்டுகள் வவுனியா-மூன்றுமுறிப்பு பகுதி வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட 6 கைக்குண்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைக்குண்டுகளானது கடந்த யுத்தக்காலத்தில் வன்னி பாதுகாப்பு தலைமையத்தை தாக்குவதற்காக கொண்டுவரப்பட்டவை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இதற்கு முதலும் வன்னி பாதுகாப்பு கட்டளை தலைமையகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.