ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள கடைசி நகரை மீட்க கடும் மோதல்

847 0

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதகரித்து இருந்தபோது ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி நாடாக அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர்.

அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா ஆதரவளித்து.

அமெரிக்க விமானப் படையின் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் அண்மையில் முழுமையாக மீட்கப்பட்டது.

அதை தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் இருந்த மேலும் சில நகரங்கள் படிப்படியாக கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் அவர்கள் வசம் இருக்கும் கடைசி நகரமான தல் அபர் பகுதியை மீட்க தாக்குதல் நடத்துமாறு ஈராக் ராணுவத்துக்கு அந்நாட்டி பிரதமர் ஹைதர் அல்- அபாடி உத்தரவிட்டுள்ளார்.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் அனைவரும் சரணடைய வேண்டும். அல்லது செத்துமடிய வேண்டும் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்- அபாடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment