இலங்கை அணியின் தோல்விக் குறித்து மஹேலவின் பதிவு

320 0

இலங்கை கிரிக்கெட் அணிக்கு வெளியாட்களின் அச்சுறுத்தல் காணப்படுகின்றமை தொடர்பில் அணியின் பயிற்சிவிப்பாளருக்கு தெரிகிறதென்றால் அது பிரச்சினைக்குரிய ஒன்றென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தன்னுடைய உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் வாசகர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹேல இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் நேற்றைய தினம் இந்தியாவுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத அணியின் ரசிகர்களின் மனநிலையே தனக்கும் ஏற்பட்டதாகவும்,எனினும் அதற்கு தீர்வினைத் தேடுவதே சிறந்தது என்றும் மஹேல குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment