உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் புளத்சிங்கள பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம வலய பொலிஸ் சட்ட அதிகாரமுள்ள பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி லொறி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
அததுடன் லொறியில் இருந்த 12 துப்பாக்கி குண்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், புளத்சிங்கள பொலிஸார மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.