நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலை சம்பந்தமான விரிவான ஒப்பந்தம் பாராளுமன்றத்திற்கு

279 0

நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்பது சம்பந்தமாக விரிவான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதனை சட்டமூலமாக பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். 

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் போது பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட சட்டமூலம் போன்றே நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலை தொடர்பிலும் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.

அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டதுடன், அதற்காக முத்தரப்பு நோக்கங்களை வௌிப்படுத்தும் பத்திரத்தில், சுகாதார அமைச்சு, தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை வங்கி ஆகியன ஒப்பமிட்டதாக அமைச்சர் கூறினார்.

அந்த நோக்கங்களை உள்ளடக்கிய பத்திரத்திற்கு மேலதிகமாக விரிவான பத்திரம் ஒன்று சட்ட மா அதிபரினால் தற்போது நகல் வடிவில் வரையப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

நகல் வடிவில் உள்ள பத்திரம் உடன்படிக்கை வடிவத்திற்கு மாற்றப்பட்டதன் பின்னர் அந்த விரிவான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுடன், அதன்பின்னர் அதனை சட்டமூலமாக பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்வதாக அமைச்சர் கூறினார்.

Leave a comment