நுவரெலியாவில் ஏற்பட்ட மாற்றம்.!

239 0

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்சியாக பெய்து வரும் தொடர் மழையினால் இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கபட்டுள்ளது.

இதேவேளை நுவரெலியாவில் இருந்து நானுஓயா ஊடாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியிலும், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், அதிகமான பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என்பதோடு, சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எறியவிட்டு வாகனங்களை  செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave a comment