காணாமல் போனோர் அலுவலகத்தில் ஜே வி பி முறையிடவுள்ளது

287 0

maxresdefault-720x480ஜேவிபியின் ஸ்தாபகர் ரோகன விஜயவீர அதன் முன்னாள் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட்ட ஜேவிபியின் உறுப்பினர்கள் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தில் முறைப்பாடு செய்ய ஜேவிபி தீர்மானித்துள்ளது.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு, கடந்த காலத்தில் காணாமல் போன அனைவர் தொடர்பிலும் விசாரணை செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஜேவிபியுடன் இணைந்து செயற்பட்டு காணாமல் போன கட்சியின் அங்கத்தவர்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.