வடக்கு அபிவிருத்தி குறித்து கோரிக்கை

286 0

vijayakala-kala-makeswaranயுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற, மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் போது பல்வேறு நெருக்கடிகளை வடக்கு மாகாணம் எதிர் கொண்டது.
ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்கள் பல்வேறு திட்டங்களை அனுபவிக்க முடிகின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.